News November 3, 2025

திருப்பத்தூர்: கல்லூரி மாணவர் மீது தாக்குதல்!

image

திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும் திலிப் குமார், கடந்த (நவ.1) அன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இளைஞர்கள் வாக்குவாதம் செய்து திலிப் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, திலீப்குமார் அளித்த புகாரின் பேரில், நாட்றம்பள்ளி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விஜயராகவன் என்பவரை கைது செய்தனர்.

Similar News

News November 4, 2025

திருப்பத்தூர்: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட பொதுமக்கள் குறைதீர்வு முகாம் வரும் நவ.8ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தாலுக்கா, கெஜல்நாயக்கன்பட்டி, ஆம்பூர், மராபாத், வாணியம்பாடி, ஆவரங்குப்பம், நாட்றம்பள்ளி, நியாய விலை கடைகளில் குடும்ப அட்டையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

News November 4, 2025

திருப்பத்தூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடூரம்!

image

ஜோலார்பேட்டை அடுத்த கலர் வட்டம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை, (நவ.2) அன்று பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வைத்து ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வல்லரசு என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வல்லரசை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், அந்த நபரை நேற்று (நவ.3) போலீசார் சிறையில் அடைந்தனர்.

News November 4, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு முதல் இன்று (நவ.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!