News November 3, 2025
செங்கல்பட்டு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் அல்லது செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க.
Similar News
News November 4, 2025
செங்கல்பட்டு: வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் இன்று அதிகாலை ஆம்னி பேருந்து மற்றும் ஒரு ஈச்சர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆம்னி பேருந்து டிரைவருக்கும் ஈச்சர் வாகனம் ஓட்டிய டிரைவருக்கும் கையில் லேசாக காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 4, 2025
செங்கல்பட்டு: நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் மாயம்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைப் அலிக்கான் இவர் திம்மாவரம் பகுதியில் ‘ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திம்மாவரம் பகுதியிலுள்ள பாலாற்றில், தனது நண்பர்கள் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாரத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார். கடந்த 2 நாட்களாக தேடியும் உடல் கிடைக்கவில்லை இதனால் இன்றும் இவரது உடல் தேடப்பட உள்ளது.
News November 4, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (நவம்பர்-03) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


