News November 3, 2025
தெரு நாய்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் CS நேரில் ஆஜர்!

தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் அரசு தலைமைச் செயலர்கள் கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று SC அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் தலைமைச் செயலாளர்(CS) முருகானந்தம் இன்று(நவ.3) ஆஜரானார். தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நெறிமுறைகளை வகுப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
விவசாயிகளுக்கு அதிக யூரியா தந்துள்ளோம்: மத்திய அரசு

காரீப் பருவத்திற்காக விவசாயிகளுக்கு போதுமான அளவு யூரியா, உரங்களை வழங்கியுள்ளதாக மத்திய அரசின் உரங்கள் துறை தெரிவித்துள்ளது. 185.39 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவை என கணக்கிட்ட நிலையில், 230.53 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு உறுதி செய்யப்பட்டு, 193.20 லட்சம் மெட்ரிக் டன் விற்கப்பட்டதாக கூறியுள்ளது. இது கடந்த ஆண்டில் பயன்படுத்தியதை விட 4.08 லட்சம் மெட்ரிக் டன் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 4, 2025
நவம்பர் 4: வரலாற்றில் இன்று

*1884–தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் பிறந்தநாள். *1897–தாவரவியலாளர் ஜானகி அம்மாள் பிறந்தநாள். *1967–எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பு. *1972–நடிகை தபூ பிறந்தநாள். *2012–சமையல் கலைஞர் ஜேக்கப் சகாயகுமார் அருணி மறைந்த நாள். *2022–தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் மறைந்த நாள்.
News November 4, 2025
ஜுபின் கார்க் கொலை செய்யப்பட்டுள்ளார்: அசாம் CM

பாடகர் ஜுபின் கார்க்கின் மரணமானது, விபத்து அல்ல அது கொலை என்று அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இவ்வழக்கை SIT தீவிரமாக விசாரிக்கும் நிலையில், டிச.8-ற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி அமித்ஷாவிடம் பேசியதாகவும், வெளிநாட்டில் அவர் மரணமடைந்ததால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.


