News November 3, 2025

12 மணிக்கு மேல் வெளியே செல்லாதீங்க

image

பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 4°© வரை உயரும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அனைத்து கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக, அடுத்த 5 நாள்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடியில் வரலாறு காணாத வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதால், 12 மணிக்கு மேல் வெளியே செல்வதை தவிர்க்கவும்.

Similar News

News November 4, 2025

விவசாயிகளுக்கு அதிக யூரியா தந்துள்ளோம்: மத்திய அரசு

image

காரீப் பருவத்திற்காக விவசாயிகளுக்கு போதுமான அளவு யூரியா, உரங்களை வழங்கியுள்ளதாக மத்திய அரசின் உரங்கள் துறை தெரிவித்துள்ளது. 185.39 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவை என கணக்கிட்ட நிலையில், 230.53 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு உறுதி செய்யப்பட்டு, 193.20 லட்சம் மெட்ரிக் டன் விற்கப்பட்டதாக கூறியுள்ளது. இது கடந்த ஆண்டில் பயன்படுத்தியதை விட 4.08 லட்சம் மெட்ரிக் டன் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 4, 2025

நவம்பர் 4: வரலாற்றில் இன்று

image

*1884–தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் பிறந்தநாள். *1897–தாவரவியலாளர் ஜானகி அம்மாள் பிறந்தநாள். *1967–எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பு. *1972–நடிகை தபூ பிறந்தநாள். *2012–சமையல் கலைஞர் ஜேக்கப் சகாயகுமார் அருணி மறைந்த நாள். *2022–தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் மறைந்த நாள்.

News November 4, 2025

ஜுபின் கார்க் கொலை செய்யப்பட்டுள்ளார்: அசாம் CM

image

பாடகர் ஜுபின் கார்க்கின் மரணமானது, விபத்து அல்ல அது கொலை என்று அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இவ்வழக்கை SIT தீவிரமாக விசாரிக்கும் நிலையில், டிச.8-ற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி அமித்ஷாவிடம் பேசியதாகவும், வெளிநாட்டில் அவர் மரணமடைந்ததால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!