News November 3, 2025

அரியலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 4, 2025

அரியலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு 10 மணி முதல் இன்று (நவ.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 3, 2025

அரியலூர்: நான்கு வழி சாலையை திறந்த முதலமைச்சர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (நவ.3) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக, அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இருவழித் தடத்திலிருந்து, நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ள, விருத்தாச்சலம், ஜெயங்கொண்டம், மதனத்தூர் சாலை கி.மீ 6.8 முதல் 27.6 வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

News November 3, 2025

அரியலூர்: 12th போதும்..ரூ.71,900 சம்பளத்தில் வேலை!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!