News November 3, 2025

BREAKING: முதல் முறையாக அறிவித்தார் விஜய்

image

தவெக ஆரம்பித்து 21 மாதங்களுக்கு பிறகு, முதல்முறையாக 3 அணிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து, விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டது. அதேபோல், கட்சி நிர்வாகிகளை நியமிக்காமல் இழுத்தடிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், முதல்கட்டமாக மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை விஜய் நியமித்துள்ளார்.

Similar News

News November 4, 2025

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பேராபத்தான சூழல்: சீமான்

image

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். X-ல், கோவை மாணவிக்கு நடந்த கொடூரம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்கும் வரை இதுபோன்ற சமூகக் குற்றங்களை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், கோவை கொடூரத்திற்கு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட திமுக அரசு தவறியதே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். ▶பொருள்: எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.

News November 4, 2025

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும்

image

அதிகாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

error: Content is protected !!