News November 3, 2025
ராணிப்பேட்டை: இறந்தவர் உடலை அடக்கம் செய்யமுடியாமல் அவலம்

ராணிப்பேட்டை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், ரெண்டாடி பகுதியில் இறந்தவர்களை ஊருக்கு அருகில் உள்ள ஏரியில் அடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது பருவமழை காரணமாக ஏரி நிரம்பியுள்ளது. அதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பின்னர் ஊராட்சி அதிகாரி, விரைவில் உங்களுக்கு மயான காடு அமைக்கபடம் என மக்கள் முன்னிலையில் உறுதியளித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-03) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
நலத்திட்ட உதவிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.3) இராணிப்பேட்டை மாவட்டத்தில் 43.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 115 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர், 24.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 72,880 பயனாளிகளுக்கு 296.46 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
News November 3, 2025
ராணிப்பேட்டை: இளைஞர்களே செம வாய்ப்பு..மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <


