News November 3, 2025
BREAKING: விஜய்யின் அணியில் இணைந்தனர்

கரூர் சம்பவத்தை தொடர்ந்து தவெகவில் உருவாக்கப்பட்ட தொண்டரணிக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற IG ரவிக்குமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் இணைந்துள்ளனர். உளவுப்பிரிவு உள்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, ஓய்வு பெற்ற DSP-க்கள் சஃபியுல்யா, சிவலிங்கம், ADSP அசோகன்(ஓய்வு) ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.
Similar News
News November 4, 2025
ஒரே தொடரில் பல வரலாற்று சாதனைகள்

நடப்பு ODI WC தொடரில் தீப்தி சர்மா பல சாதனைகளை படைத்துள்ளார். ODI WC நாக் அவுட் போட்டிகளில் அரைசதம் மற்றும் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர். ஒரு ODI WC தொடரில் 200+ ரன்கள் மற்றும் 20 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர். ஒரு ODI WC தொடரில் ஒரு போட்டியில், யுவராஜ் சிங்கிற்கு பிறகு அரைசதம் மற்றும் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்தியர் உள்ளிட்ட சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
News November 3, 2025
சற்றுமுன்: கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. இன்றைய நாளின் முடிவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டு ₹88.75 ஆக நிலைபெற்றது. கடந்த அக்.27-ல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ₹88.19 ஆக இருந்த நிலையில், தற்போது ₹88.75 ஆக சரிந்துள்ளது. வலுவான டாலர், அந்நிய செலாவணி வெளியேற்றம் ஆகியவை இதற்கு காரணங்களாகும். ரூபாய் மதிப்பு சரிந்தால், இறக்குமதி செலவு அதிகரித்து, விலைகள் உயரலாம்.
News November 3, 2025
இரட்டை குழந்தைக்கு இரண்டு அப்பாக்கள்

பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள் இருக்க முடியுமா? பிரேசிலில் நடந்த அப்படி ஒரு அபூர்வ சம்பவம் SM-ல் வைரலாகியுள்ளது. 19 வயது பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளின் DNA-வை சோதித்ததில் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. மிக மிக அரிதாக, ஒரே மாதவிடாய் சுழற்சிக் காலத்தில், இரண்டு கருமுட்டைகளுடன் இரண்டு வெவ்வேறு விந்தணுக்கள் இணைந்து கருத்தரிப்பதால் இப்படி நடக்க வாய்ப்புள்ளதாம்.


