News November 3, 2025
தென்காசி: நாளை இங்கெல்லாம் மாதாந்திர மின்தடை

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, மற்றும் சாம்பவர் வடகரை துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.04) காலை 9 மணி – மதியம் 2 மணி வரை மின்தடை. பகுதிகள்: தென்காசி, மேலகரம், குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டியபுரம், புளியரை, வல்லம், ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் சுற்றியுள்ள பல கிராமங்களில் மின்தடை. SHARE!
Similar News
News November 3, 2025
தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்ட உட்பட்ட ஊர்களில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைதளங்களான முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வளைத்தலங்களில் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும். உறுதி செய்யப்படாத தகவல்கள், வன்முறையை தூண்டும் விதமான பதிவுகள் போன்றவற்றை தவிர்க்கவும். தென்காசி மாவட்ட காவல் துறை உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறது.
News November 3, 2025
நவம்பர் மாத மின் குறைதீர் கூட்ட தேதிகள்

தென்காசி மாவட்டத்தில் நடப்பு நவம்பர் மாதத்தில் 11ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுபோல் 14ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும் 21ம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடக்கிறது. அனைத்து கூட்டங்களும் பகல் 11 மணிக்கு நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
செங்கோட்டை: ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

தென்காசி மாவட்டம், கடையம் மேட்டூர் இடையே திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த பயணிகள் ரயில் முன்பு சுமார் 3.15 மணியளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். என் தொடர்ச்சியாக அந்த பகுதியில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.


