News November 3, 2025

கள்ளக்குறிச்சி பெண்கள் அதிர்ச்சி; 19,290 மனுக்கள் தள்ளுபடி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், மகளிர் உரிமைத்தொகை வேண்டி சுமார் 49,429 பேர் மனுக்கள் அளித்திருந்தனர். இந்நிலையில், சுமார் 19,290 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 30,139 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (நவ.2) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 3, 2025

கள்ளக்குறிச்சி: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News November 3, 2025

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று (நவ.03) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சிய பிரசாந்த் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டார். பின் தொடர்புடைய அலுவலர்களை விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

News November 3, 2025

கள்ளக்குறிச்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க.

error: Content is protected !!