News November 3, 2025
நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பொழியும்

நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், T.V.மலை, காஞ்சீபுரம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News November 3, 2025
BREAKING: நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும்…

₹50,000 வரை பரிசுகளை வெல்லும் வினாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நவ.5(புதன்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூழல் அறிவோம்’ என்ற தலைப்பில் 6 – 9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த வினாடி வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 2 மாணவர்களை உள்ளடக்கிய 5 குழுக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 3, 2025
கேன்சர் சிகிச்சை எடுப்பவர்கள் கருத்தரிப்பதில் பிரச்னையா?

மார்பகப் புற்றுநோய்க்காக வழங்கப்படும் கீமோதெரபி, கருமுட்டைகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடும். இது சிலருக்கு தற்காலிகமாகவும், சிலருக்கு நிரந்தரமாகவும் கருவுறுதலை பாதிக்கலாம். எனவே, சிகிச்சையை தொடங்கும் முன் கருவுறுதல் பற்றி டாக்டரிடம் பேசுங்கள். கருமுட்டை அல்லது கருப்பை திசுவை உறைய வைக்கலாம். கர்ப்பம் தரிப்பதற்கு இப்படி பல வழிகள் இருப்பதால் கவலைவேண்டாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News November 3, 2025
பாஜக தாக்க தயாராகிவிட்டது: கே.என்.நேரு

திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து பாஜக தாக்க தயாராகிவிட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். பாஜக தாக்குதலின் முதல் பலி நானாகிவிட்டேன் எனவும், இருப்பினும் எந்த தாக்குதலையும் எதிர்கொண்டு நிற்போம் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, நகராட்சி நிர்வாகத்துறையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலை வழங்கியதாக <<18146062>>கே.என்.நேரு<<>> மீது அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி இருந்தது.


