News November 2, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.02) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 3, 2025
ராம்நாடு: மீனவர்கள் கைது.. முதலமைச்சர் கடிதம்

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் நாகை மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் உள்ளன. இதனை குறிப்பிட்டு, தொடர் கைது நடவடிக்கைகளை தடுக்கவும், மீனவர்கள் அனைவரும் நாடு திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
News November 3, 2025
ராம்நாடு: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி!

ராம்நாடு மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04657 230657 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News November 3, 2025
ராம்நாடு: வடகிழக்கு பருவமழை – ஆட்சியர் அறிவுரை

ராம்நாடு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் எதிர்பாராத மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மக்கள் வானிலை முன்னறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ள TN Alert, Sachet செயலிகளை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மரங்களுக்கு அடியில் நிற்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.


