News November 2, 2025
தமிழர்கள் உரிமை பறிபோகும்: வேல்முருகன்

தமிழ்நாட்டில் இருக்கும் பிற மாநிலத்தவர்கள் அவரவர் மாநிலங்களுக்கு சென்று வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு சட்டப்பேரவை மற்றும் MP-க்களை தமிழ் மக்களே தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், SIR அடிப்படையில் இங்குள்ள பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டால், தமிழர்களின் உரிமை பறிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
அனில் அம்பானியின் ₹3,084 கோடி சொத்துக்கள் முடக்கம்

அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான ₹3,084 கோடி மதிப்பிலான சொத்துகளை ED முடக்கியது. RHFL மற்றும் RCFL நிறுவனங்கள் மூலம் வங்கியில் இருந்து திரட்டப்பட்ட பொது பணத்தை முறைகேடாக கையாண்டதாக ED வழக்குப்பதிவு செய்தது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனில் அம்பானியின் 40-க்கும் மேற்பட்ட சொத்துக்களை முடக்கி ED நடவடிக்கை எடுத்துள்ளது.
News November 3, 2025
தெரு நாய்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் CS நேரில் ஆஜர்!

தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் அரசு தலைமைச் செயலர்கள் கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று SC அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் தலைமைச் செயலாளர்(CS) முருகானந்தம் இன்று(நவ.3) ஆஜரானார். தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நெறிமுறைகளை வகுப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
News November 3, 2025
12 மணிக்கு மேல் வெளியே செல்லாதீங்க

பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 4°© வரை உயரும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அனைத்து கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக, அடுத்த 5 நாள்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடியில் வரலாறு காணாத வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதால், 12 மணிக்கு மேல் வெளியே செல்வதை தவிர்க்கவும்.


