News November 2, 2025
தேனி: சாக்கு தைக்கும் தொழிலாளி தற்கொலை

தேனி அல்லிநகரம் தெலுங்கு பஜார் தெருவைச் சார்ந்தவர் குமரேசன். சாக்கு தைக்கும் தொழிலாளி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
Similar News
News November 3, 2025
போடி: பெட்டிக்கடையில் மது விற்பனை

போடி தாலுகா போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (நவ.2) மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வீரன் (42) என்பவர் அவரது பெட்டி கடையில் மதுபாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வீரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News November 3, 2025
தேனி: குடிப்பழகத்தால் பறிபோன உயிர்

போடி குப்பிநாயக்கன்பட்டி மருது பாண்டியர் தெருவை சேர்ந்தவர்கள் ராஜபிரபு (35) – கீர்த்தனா (25) தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ராஜபிரபு மது பழக்கத்திற்கு அடிமையாகி, வீட்டில் உள்ள பொருட்கள், குழந்தைகளின் கொலுகளை விற்று மது குடித்துள்ளார். இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
News November 3, 2025
தேனி: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

தேனி மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <


