News November 2, 2025
வந்தது புயல் சின்னம் .. மழை பொளந்து கட்டும்

மொன்தா புயலுக்கு பிறகு தமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்தது. இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக் கடலில் இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. நவ.8 வரை தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 3, 2025
CA தேர்வு முடிவு வெளியானது

சார்ட்டர்ட் அக்கவுண்ட் (CA)-2025 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பரில் நடந்த CA படிப்பின் பவுண்டேஷன், இண்டர்மீடியட், மற்றும் பைனல் தேர்வுகளின் முடிவுகளை ICAI-யின் இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். https://icai.nic.in/caresult/ என்ற இணைய முகவரிக்கு சென்று மாணவர்கள் தங்களின் ரோல் நம்பர், ரெஜிஸ்டர் நம்பர் இரண்டையும் எண்டர் செய்து தேர்வு முடிவை பார்க்கலாம். SHARE IT
News November 3, 2025
SIR குறித்து அச்சப்பட தேவையில்லை: ECI

SIR மீது பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்று ECI தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் தகுதியற்றவர்களை நீக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, எதிர்பார்த்ததை விட SIR பணிகள் சிறப்பாக நடைபெறும் என ECI குறிப்பிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து வழக்குகளும் நவ.13-ல் விசாரிக்கப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
News November 3, 2025
மழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, நவ.9-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க மக்களே!


