News November 2, 2025

சபரிமலை செல்ல சிறப்பு ரயில்!

image

சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவ.14 முதல் ஜன.16 வரை 2 மாதங்களுக்கு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். வெள்ளி இரவு 11.55-க்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.30-க்கு கொல்லத்தை அடையும். மறுமார்க்கத்தில் சனி இரவு 7.35-க்கு புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

Similar News

News November 3, 2025

இனி நாம் நுகர்வோர் அல்ல, முன்னோடி: PM

image

<<18184055>>ESTIC 2025<<>> மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா இனி தொழில்நுட்பத்தின் நுகர்வோர் அல்ல, தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தில் உலகளாவிய முன்னோடி என்று குறிப்பிட்டார். டிஜிட்டல் உள்கட்டமைப்பு வளர்ந்துள்ளதாக கூறிய அவர், காப்புரிமை பதிவுகள் 17 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும், ஸ்டார்ட்அப் சூழலில் உலகில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

News November 3, 2025

நவ.6-ல் அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம்!

image

சென்னை தலைமைச் செயலகத்தில் நவ.6-ம் தேதி அமைச்சர்களின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், MP, MLA-க்களுடன் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத தவெக போன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாது என தெரிகிறது.

News November 3, 2025

பெண்கள் வெளியே தலைகாட்டவே அச்சம்: நயினார்

image

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் செய்யப்பட்ட விவகாரம் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து நயினார், வீட்டில் இருந்தாலும் வெளியில் போனாலும் பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே பொழுது விடிகிறது; DMK ஆட்சியில் பெண்கள் வெளியே தலைகாட்டவே அஞ்சுகின்றனர். ஆனால், CM கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

error: Content is protected !!