News November 2, 2025

ஓடும் ரயிலில் பயணிகளுக்கு கத்திக்குத்து!

image

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அருகே ஹண்டிங்டன் ரயிலில் சென்றுகொண்டிருந்த பயணிகள் மீது சரமாரியாக கத்திகுத்து தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தால் பலத்த காயங்களுடன் 10 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ரயிலில் நடந்த கொடூரமான சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது என UK PM கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 3, 2025

இனி நாம் நுகர்வோர் அல்ல, முன்னோடி: PM

image

<<18184055>>ESTIC 2025<<>> மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா இனி தொழில்நுட்பத்தின் நுகர்வோர் அல்ல, தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தில் உலகளாவிய முன்னோடி என்று குறிப்பிட்டார். டிஜிட்டல் உள்கட்டமைப்பு வளர்ந்துள்ளதாக கூறிய அவர், காப்புரிமை பதிவுகள் 17 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும், ஸ்டார்ட்அப் சூழலில் உலகில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

News November 3, 2025

நவ.6-ல் அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம்!

image

சென்னை தலைமைச் செயலகத்தில் நவ.6-ம் தேதி அமைச்சர்களின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், MP, MLA-க்களுடன் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத தவெக போன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாது என தெரிகிறது.

News November 3, 2025

பெண்கள் வெளியே தலைகாட்டவே அச்சம்: நயினார்

image

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் செய்யப்பட்ட விவகாரம் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து நயினார், வீட்டில் இருந்தாலும் வெளியில் போனாலும் பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே பொழுது விடிகிறது; DMK ஆட்சியில் பெண்கள் வெளியே தலைகாட்டவே அஞ்சுகின்றனர். ஆனால், CM கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

error: Content is protected !!