News November 2, 2025
விவசாயிகளை தேடி வரும் அரசு திட்டம்

வேளாண் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் அதன் பயனையும் நேரடியாக விவசாயிகளின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்கிறது உழவரைத் தேடி வேளாண்மை திட்டம். இதன் கீழ், விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது & 4-வது வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த கிராமங்களில் நடக்கும். விவசாயிகளே, உங்களுக்கு சந்தேகங்கள், கோரிக்கைகள் இருந்தால் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம். அனைவரும் தெரிந்துகொள்ள SHARE THIS.
Similar News
News November 3, 2025
12 மணிக்கு மேல் வெளியே செல்லாதீங்க

பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 4°© வரை உயரும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அனைத்து கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக, அடுத்த 5 நாள்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடியில் வரலாறு காணாத வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதால், 12 மணிக்கு மேல் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
News November 3, 2025
நவ.5-ல் விஜய்யின் புதிய திட்டம்!

நவம்பர் 5-ல் நடைபெற உள்ள தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இப்பொதுக்குழுவில் தேர்தல் சின்னமாக எதைத் தேர்வு செய்யலாம் என்பதனை ஆலோசித்து முடிவு செய்து, தீர்மானம் போட விஜய் முடிவெடுத்திருக்கிறாராம். மேலும் திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
News November 3, 2025
PM மோடியால் TN-ல் இதை பேச முடியுமா? CM ஸ்டாலின் சவால்

பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக PM மோடி பேசியதற்கு CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். TN-ல் நிறைய வாய்ப்புகள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளதாக பிஹாரிகள் கூறுவதாக தெரிவித்த அவர், பிஹார் மக்களுக்கு தமிழ்நாட்டில் துன்புறுத்தல் எனும் பேச்சை TN-க்கு வந்து PM மோடியால் பேச முடியுமா என சவால்விட்டிருக்கிறார். மேலும், PM என்ற பொறுப்புக்குரிய மாண்பை அவர் இழக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.


