News November 2, 2025

புதுகை: பட்டாகத்தியுடன் மக்களை மிரட்டிய இளைஞர்கள் கைது

image

ஆலங்குடி அருகே பாத்தம்பட்டி பஸ் நிறுத்தம் பள்ளத்தை விடுதியை சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் அரிமளம் விளக்கு ரோடு செமகோட்டை பகுதியை சேர்ந்த வீர கணேஷ் ஆகிய இருவரும் பட்டக்கத்தியை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். இந்நிலையில் அவ்வழியே ரோந்து வந்த ஆலங்குடி போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 3, 2025

புதுகை: B.E போதும் வேலை ரெடி!

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK<<>> HERE .
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 3, 2025

புதுகை: அரிவாள் வெட்டு; சிறுவன் உள்பட 2 பேர் கைது

image

விராலிமலையைச் சேர்ந்தவர் கருப்பையா (42), இவரது வீட்டுக்கு அருகே சில சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக சென்றுள்ளனர். இதை தட்டிக்கேட்ட பாண்டியனிடம் சிறுவனும் அவருக்கு ஆதரவாக கருப்பையா, இவரது தம்பி கோவிந்தராஜ் (36) ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டனர். அப்பொழுது கோவிந்தராஜ் கருப்பையாவை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

News November 3, 2025

புதுகை: பசுமாடு மோதி தொழிலாளி பலி!

image

ஆலங்குடியைச் சேர்ந்தவர் சக்திவேல் (48), இவர் வீட்டில் பசுமாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பசுமாட்டிற்கு சக்திவேல் தீவணம் வைத்து கொண்டிருந்தார். அப்போது மாடு எதிர்பாராதவிதமாக சக்திவேலை முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!