News November 2, 2025
ராம்நாடு: ரூ.1 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

இன்று இந்திய கடலோர காவல் படை மற்றும் மண்டபம் சுங்கத்துறையினர் இணைந்து தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான 1360 கிலோ கடல் அட்டைகள் நாட்டுப்படக்கில் இருந்தது. இதனை அடுத்து கடல் அட்டையையும், நாட்டுப்படகையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 3, 2025
ராம்நாடு: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி!

ராம்நாடு மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04657 230657 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News November 3, 2025
ராம்நாடு: வடகிழக்கு பருவமழை – ஆட்சியர் அறிவுரை

ராம்நாடு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் எதிர்பாராத மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மக்கள் வானிலை முன்னறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ள TN Alert, Sachet செயலிகளை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மரங்களுக்கு அடியில் நிற்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
News November 3, 2025
ராம்நாடு: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

ராம்நாடு மக்களே, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 45வயதுகுட்பட்ட B.E., B.Tech., CA., CMA., MBA..டிகிரி படித்தவர்கள் <


