News April 18, 2024

இந்தியாவில் வாக்களிக்கும் முதல் இலங்கைத் தமிழர்

image

திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி. இவரின் பெற்றோர் 1983ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரம் வந்தவர்கள். தற்போது 38 வயதாகும் நளினி, இந்தியாவில் பிறந்ததை ஆதாரமாக கொண்டு வழக்குத் தொடுத்து பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளார்.

Similar News

News August 17, 2025

ரெய்டில் சிக்கவுள்ள அடுத்த அமைச்சர்கள் யார் யார்?

image

அமைச்சர் ஐ.பி.,க்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடக்கிறது. ரெய்டில் இன்னும் பல அமைச்சர்கள் சிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தென் பகுதியில் இந்த ரெய்டு ஒரு புயலை கிளப்புமாம். அதாவது, அமைச்சர்கள் மூர்த்தி(மதுரை), KKSSR.ராமச்சந்திரன் (விருதுநகர்), பெரியகருப்பன்(சிவகங்கை) ஆகியோர் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ரெய்டு தி.மலையில் என EPS கூறியதால் வேலுவும் பட்டியலில் இருக்கலாம்.

News August 17, 2025

‘கூலி’யால் பின்வாங்கும் மதராஸி

image

கிடைக்கும் யூடியூப் சேனல்களில் எல்லாம் நேர்காணல்கள், ஆடியோ லாஞ்ச்சில் துதிபாடல்கள், அல்டிமேட் ஸ்டார் காஸ்ட் என பல இருந்தும் சரியான திரைக்கதை இல்லாததால் ‘கூலி’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், செப்.5-ல் ரிலீஸாகவுள்ள ‘மதராஸி’ படத்துக்கு அதிக புரமோஷன் செய்து ரசிகர்களுக்கு தேவையில்லாத எதிர்பார்ப்பை அளிக்கப் போவதில்லை என AR முருகதாஸ் கூறியுள்ளார். வெற்றி பெறுவாரா SK?

News August 17, 2025

ஓரங்கட்டப்படும் அன்புமணி.. மகளுக்கு முக்கியத்துவம்?

image

பாமகவின் சிறப்பு பொதுக்குழு இன்று(ஆக., 17) நடக்கவிருக்கிறது. இதில் ராமதாஸ் அதிரடி தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ராமதாஸ் அறிவித்திருந்த அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படவுள்ளதாகவும், அனைத்து அதிகாரமும் நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே என விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறதாம். மூத்த மகள் காந்திமதிக்கு முக்கிய பொறுப்பு வழங்க வாய்ப்பிருக்கிறது.

error: Content is protected !!