News November 2, 2025
தர்மபுரியில் ஓர் குட்டி ஊட்டி!

தருமபுரியில் இருந்து 25 கி.மீ. தொலைவில், 3000 அடி உயரத்தில் வத்தல்மலை அமைந்துள்ளது. இது ‘ஏழைகளின் குட்டி ஊட்டி’ என அழைக்கப்படுகிறது. 24 கொண்டை ஊசி வளைவுகளுடன் ரம்மியமான பயணத்தை அளிக்கும் இது, குளிர்ச்சியான காலநிலை மற்றும் மூலிகைச் செடிகள் நிறைந்தது. காபி, மிளகு சாகுபடி இங்கு பிரபலம். வியூ பாயிண்ட், வத்தல்மலை அருவி ஆகியவை முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இது ஒரு சிறந்த பட்ஜெட் சுற்றுலாத் தலமாகும்.
Similar News
News November 3, 2025
தருமபுரி: 2,708 பணியிடங்கள்! APPLY HERE!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: <
News November 3, 2025
தருமபுரி: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க’
News November 3, 2025
தருமபுரி: ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று (நவ.01) இரவு விநாடிக்கு 8000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நீர்பிடிப்புப்பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று (நவ.02), ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் 6500 கனஅடியாகக் குறைந்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மழைபெய்தால் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


