News November 2, 2025
புதுவை: சுற்றுலா வந்தவருக்கு நேர்ந்த சோகம்!

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சராயு பாண்டூரங் ஹாண்டே. இவர் தனது உறவினர்கள் 20 பேருடன் புதுவைக்கு அக்.31 அன்று சுற்றுலா வந்துள்ளார். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மறைமலையடிகள் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தபோது ஹண்டேவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
புதுவை: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000 – ரூ.2,20,000
3 கல்வித் தகுதி: B.E., B.Tech., CA., CMA., MBA.,
4. வயது வரம்பு: 45 வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 3, 2025
புதுவை: ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைது!

மறைமலை அடிகள் சாலை அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு சென்ற போலீசார், சந்தேகமான முறையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் உழவர்கரை மடத்து வீதியைச் சேர்ந்த ஜெயன் சூசைராஜ், ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த மாலிக், கிருபசிந்து மாலிக் என்பதும், கஞ்சா வைத்திருந்தும் தெரிந்தது. அந்த 3 பேரையும் உருளையன்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News November 3, 2025
புதுவை: பயங்கர ஆயுதத்துடன் சுற்றித் திரிவர் கைது

கோட்டைமேடு பகுதியில் நேற்று இளைஞர் ஒருவர் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதயடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் அந்த இளைஞரை பிடித்து சோதனை செய்ததில், அவர் கத்தி போன்ற பயங்கர ஆயுதத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணையில், அவர் கணுவாப்பேட்டையைச் சேர்ந்த நுாடிஷ் என தெரியவந்ததையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர்.


