News November 2, 2025
புதுகை: சுவர்மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குடி அருகே தவளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மரியசூசை(52). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அரசடிபட்டி 4 ரோடு அருகில் சென்ற போது மரியசூசை ஓட்டி சென்ற பைக் எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் இருந்த திருமண் மண்டபத்தின் சுற்றுச்சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 3, 2025
புதுகை: சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பூனை குத்திப்பட்டியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட இலுப்பூர் போலீஸார் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுந்தர்(34), சரவணன்(58), வெள்ளைக்கண்ணு(36), பாண்டி(36) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த இலுப்பூர் போலீஸார் அவர்களிடமிருந்து சூதாட்ட அட்டை, ரூ 5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
News November 3, 2025
புதுகை: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
புதுகை: அரிவாள் வெட்டு; சிறுவன் உள்பட 2 பேர் கைது

விராலிமலையைச் சேர்ந்தவர் கருப்பையா (42), இவரது வீட்டுக்கு அருகே சில சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக சென்றுள்ளனர். இதை தட்டிக்கேட்ட பாண்டியனிடம் சிறுவனும் அவருக்கு ஆதரவாக கருப்பையா, இவரது தம்பி கோவிந்தராஜ் (36) ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டனர். அப்பொழுது கோவிந்தராஜ் கருப்பையாவை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


