News November 2, 2025

கோவை: 5 மாணவர்கள் GH-ல் அனுமதி

image

கோவை, திருமலையாம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் அறிவியல் கல்லூரி மாணவர் விடுதியில் நேற்று இரவு உணவு சாப்பிட்ட மாணவர்கள் 5 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

Similar News

News November 4, 2025

மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி!

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி (04.11.2025 மற்றும் 05.11.2025) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் நெல்லி பானங்கள், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

News November 3, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (03.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

உதவி கேட்பது போல் நடித்து இளைஞரிடம் செல்போன் பறிப்பு.

image

சிங்காநல்லூரை சேர்ந்த டெலிவரி ஊழியர் மாரீஸ்வரன் நேற்று அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ அருந்திய போது, அங்கு வந்த இளைஞர் தனது உறவினருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு இறக்கி விட முடியுமா? என கேட்டுள்ளார். பரிதாபத்தில் அவரும் அங்கு கொண்டு சென்று விட்டுள்ளார். அப்போது புதரில் மறைந்திருந்த இருவர் என மூவரும் சேர்ந்து மாரீஸ்வரனிடம் செல்போனை பறித்து சென்றனர். சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!