News November 2, 2025
குழந்தைகள் புத்தகம் வாசிப்பது ஏன் அவசியம்?

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட மொபைலில் தான் மூழ்கியுள்ளனர். ஏன், பெற்றோர்களே போனை கையில் கொடுக்கின்றனர். அது ஆபத்து எனக்கூறும் டாக்டர்கள், குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பதை கற்று கொடுக்க சொல்கின்றனர். புத்தகம் வாசித்தால் கவனச்சிதறல் குறையும், மன அழுத்தம் குறையும், நினைவாற்றல் அதிகரிக்கும், அறிவாற்றல் மேம்படும், சிந்தனை திறன் வலுவாகும், சொல்வளம் பெருகும் என அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News November 3, 2025
ஒரு பூத்திலும் RJD வெல்லக் கூடாது என காங்., திட்டம்: மோடி

பிஹாரில் பரப்புரை செய்த PM மோடி, ஒரு குடும்பம் (RJD ) மாநிலத்திலேயே அதிக ஊழல் செய்த குடும்பம்; மற்றொரு குடும்பம் (காங்.,) நாட்டிலேயே அதிக ஊழல் செய்த குடும்பம் என்று கடுமையாக சாடினார். CM வேட்பாளரில் காங்கிரஸுக்கு உடன்பாடு ஏற்படவில்லை; இதனால், RJD காங்கிரஸுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளது. அதேபோல் எந்த பூத்திலும் RJD வெல்லக்கூடாது என காங்., முடிவு செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.
News November 3, 2025
ஆச்சரியப்பட வைக்கும் விலங்குகள்

நீச்சல் என்பது கடல் விலங்குகளின் இயற்கையான பண்பாக கருதப்படுகிறது. இருப்பினும், நிலத்தில் வாழும் பல விலங்குகள் நன்றாக நீந்தும் திறன் கொண்டவை. அவை என்னென்ன விலங்குகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களை ஆச்சரியப்பட வைத்த விலங்கு எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 3, 2025
இந்திய அணியை பாராட்டிய அரசியல் தலைவர்கள்

இந்திய மகளிர் அணியின் வெற்றி எண்ணற்ற இளம் பெண்களை அச்சமின்றி கனவு காண வைக்கும் என்று ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். மகளிர் அணியின் தைரியம், மன உறுதி ஆகியவை இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். இதே போல மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ், ரேகா குப்தா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


