News November 2, 2025

தேனி: கணவர் குடிப்பழக்கத்தால் மனைவி தற்கொலை

image

போடி பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா (25). இவரது கணவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. குடிப்பழக்கத்தின் காரணமாக வீட்டில் இருந்த பொருட்களை அடகு வைத்து கீர்த்தனாவின் கணவர் குடித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கீர்த்தனா நேற்று (நவ. 1) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 3, 2025

தேனியில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

image

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.4) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன்மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

தேனி: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

image

தேனி மக்களே, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 45வயதுகுட்பட்ட B.E., B.Tech., CA., CMA., MBA..டிகிரி படித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.40,000 – ரூ.2,20,000 வரை வழங்கப்படும், கடைசி தேதி 16.11.2025 ஆகும். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 3, 2025

போடி: பெட்டிக்கடையில் மது விற்பனை

image

போடி தாலுகா போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (நவ.2) மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வீரன் (42) என்பவர் அவரது பெட்டி கடையில் மதுபாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வீரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!