News April 18, 2024
கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிப்பு

சிவகங்கை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவு தொடர்பாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளும் பணிகளை அம்மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிப்பு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News August 18, 2025
சிவகங்கை: ரோந்து காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (18.08.25) இன்று இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட
காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்து தங்கள் புகார் பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.
News August 18, 2025
சிவகங்கை: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

சிவகங்கை இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News August 18, 2025
காரைக்குடி, மானாமதுரை வழியாக சிறப்பு ரயில்

எதிர் வரும் வேளாங்கண்ணி திருவிழாவிற்காக சிறப்பு ரயில் காரைக்குடி- மானாமதுரை வழியாக (ரயில் எண் 06061) ஆக.28, செப்.3,10 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும், (ரயில் எண்- 06062) வேளாங்கண்ணியிலிருந்து – எர்ணாகுளத்திற்கு ஆக.29, செப்-4,11 ஆகிய தேதிகளிலும் இயங்க உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில்வே பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளவும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.