News November 2, 2025
ராணிப்பேட்டை: பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா ஆட்சியர் அறிவிப்பு

நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் அருகே அத்திபட்டு கிராமத்தில் நேற்று (நவ.1) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா கலந்து கொண்டு கிராம மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார்.
Similar News
News November 2, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.2) இரவு 10 மணி முதல் நாளை (நவ.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
ராணிப்பேட்டை: இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

ராணிப்பேட்டை மாவட்ட போலீசார், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட இருவரை, இன்று (நவ.2) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் கோபி (25) மற்றும் நிவாஸ் (24) மீது மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
News November 2, 2025
ராணிப்பேட்டை: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<


