News November 2, 2025

தி.மலை:போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

image

ஆரணி மாங்கா மரம் பஸ் ஸ்டாண்ட் அருகே கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் தன் கையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை (நவ.1) காலை தவற தவறவிட்டார். இந்த நிலையில் சிசிடிவி காட்சி அடிப்படையில் ஆரணி போலீசார் தேடிய நிலையில் கீழே கிடந்த பணத்தை ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆரணி டிஎஸ்பி சுரேஷ் சண்முகத்திடம ஒப்படைத்தார்.

Similar News

News November 3, 2025

தி.மலை: நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்!

image

ஆரணி வட்டம், சேவூர் கிராமம், ஆரணி-வேலூர் சாலையில் நேற்று (நவ.2) செய்யார் வட்டம் வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன் என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 3, 2025

திருவண்ணாமலை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு 10 மணி முதல் இன்று (நவ.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

மாணவி பலாத்காரம் – வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்துார் அடுத்த வசூர் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவர், கடந்த 2022, மார்ச் 11ல், 12ம் வகுப்பு படித்து வந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, குற்றவாளி சிவாவிற்கு, 20ஆண்டு சிறை மற்றும் 20,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!