News November 2, 2025

ரோடு ஷோக்கு அனுமதியா? ஸ்டாலின் தலைமையில் முடிவு

image

கரூர் துயரத்துக்கு பிறகு, அரசியல் நிகழ்ச்சிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு விதிகள் விரைவில் வெளியாகும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News November 3, 2025

SIR-க்கு எதிராக SC-யில் திமுக இன்று மனு தாக்கல்

image

SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் திமுக இன்று மனு தக்கல் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று திமுக சார்பில் நடந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்கிறது.

News November 3, 2025

FLASH: புதிய குண்டை வீசிய செங்கோட்டையன்

image

திமுகவில் மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருப்பதாக செங்கோட்டையன் புதிய குண்டை வீசியுள்ளார். அதிமுகவில் மகன், மைத்துனர், மாப்பிள்ளை தலையீடு அதிகமாக உள்ளதாக இபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக சாடினார். மேலும், தன்னால் முடியாததை முடியும் எனச் சொல்லி தன்னையும் மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது எனவும் விமர்சித்தார். செங்கோட்டையனின் இந்த தாக்குதல் அரசியலில் புயலை கிளப்பும் என கூறப்படுகிறது.

News November 3, 2025

தெலங்கானா பஸ் விபத்து.. நெஞ்சை உலுக்கும் போட்டோ!

image

தெலங்கனாவின் ரங்காரெட்டியில் நிகழ்ந்த <<18183288>>பஸ் விபத்தில்<<>> சிக்கி, 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பரிதாபமாக மரணமடைந்த 15 மாத குழந்தையும், அக்குழந்தையின் தாயாரும் உயிரின்றி கிடக்கும் போட்டோ பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. பஸ் விபத்து நிகழ்ந்த இடத்தில் மரணமடைந்தவர்களின் உடல்கள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடப்பதை பார்க்க முடியாமல், மீட்பு பணியில் ஈடுபடுவோரும் தவித்து வருகின்றனர்.

error: Content is protected !!