News November 2, 2025
140 நாள்கள் மட்டுமே திமுக ஆட்சி: நயினார்

விவசாயிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதைபற்றி எல்லாம் CM ஸ்டாலின் கவலைப்படுவதில்லை என நயினார் சாடியுள்ளார். விவசாயிகள் மீது அக்கறை இல்லாத திமுக ஆட்சி முடிவதற்கு இன்னும் 140 நாள்கள் மட்டுமே இருக்கிறது. அதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ₹30,000 நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 3, 2025
திருவள்ளூர் அரசு நிறுவன எண்களை சேவ் பண்ணிக்கோங்க

திருவள்ளூர் தலைமை அஞ்சலகம்-044-27660233, அம்பத்தூர் அஞ்சலகம்-044-26245533, திருவள்ளூர் தலைமை மருத்துவமனை-044-27660242, திருத்தணி மருத்துவமனை-044-27880588, அலகாபாத் வங்கி-9824899942, கனரா வங்கி-9444722761, இந்தியன் வங்கி-9444987061, IOB-9600167604, SBI-9600070941,திருத்தணி அரசு கல்லூரி-044-27885212, திருவள்ளூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-044-27620239. *கட்டாயம் உதவும். நண்பர்களுக்கும் பகிருங்கள்*
News November 3, 2025
வெள்ளி விலை ₹2,000 உயர்ந்தது

கடந்த மாத தொடக்கத்தில் கிடுகிடுவென உயர்ந்து மாத இறுதியில் சரிவை கண்ட வெள்ளி, நவ. மாதம் தொடங்கியது முதலே உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று(நவ.3) கிராமுக்கு ₹2 அதிகரித்து ₹168-க்கும், பார் வெள்ளி ₹1 கிலோவுக்கு ₹2,000 அதிகரித்து ₹1,68,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை இனி வரும் நாள்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால், கடந்த மாதம் வாங்கி குவித்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
News November 3, 2025
திரிணாமுல் MLA மீது திடீர் தாக்குதல்

மே.வங்கத்தில் திரிணாமுல் MLA ஜோதிப்ரியா மல்லிக் வீட்டில், நேற்று இரவு புகுந்த இளைஞர் ஒருவர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மல்லிக் கூச்சலிட்டத்தை அடுத்து, பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து வந்து, இளைஞரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அபிஷேக் தாஸ் என்ற அந்த இளைஞர், வேலைக்காக மல்லிக்கிடம் பேச வந்ததாக கூறியுள்ளார். அவர் ஏற்கெனவே மனநல சிகிச்சைக்கு பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.


