News November 2, 2025
நாமக்கல் அருகே இளம்பெண் பலி!

நாமக்கல்: வையப்பமலை அடுத்துள்ள மரப்பரை தென்னமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த கோகிலா (35) நேற்று (நவ்.1) மதியம் 11 மணியளவில் தையல் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக அவரின் உடலை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலு,ம் இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
நாமக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? இதை பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
நாமக்கல் அருகே வாலிபர் பலி!

சேலம், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (30). இவர் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பிலிப்பாக்குட்டை பகுதியை சேர்ந்தவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்துவந்தார். இந்த நிலையில் தோட்டத்தில் மருந்து அடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்ற சரவணன் தவறி கிணற்றில் விழுந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சரவணன் உடலை மீட்டனர். ஆயில்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
News November 3, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (02.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


