News April 18, 2024
நாகை : மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்த இலகுவாக இலவசமாக அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவையினை “Saksham App” உதவி எண் 1950 கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றின் மூலமாக தொடர்பு கொண்டு நாகையில் நூறு சதவீத வாக்கு பெற வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
நாகை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
நாகை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

நாகை மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் இம்மாதம்(டிச.31) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE SHARE பண்ணுங்க.!
News December 13, 2025
நாகை: டெண்டர் முறைக்கேடு – அதிமுக நிர்வாகி குற்றச்சாட்டு

நாகை மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட உள்ள கடைகளுக்காக ரூ.30.40 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், கடைகள் கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், டெண்டர் அறிவிக்கப்பட்டது முறைகேடு என அதிமுக நகரச் செயலாளர் தங்கக் கதிரவன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர அவர் வலியுறுத்தியுள்ளார்.


