News November 2, 2025
NDA ஆட்சியில் அதிக தனியார்மயமாக்கல்: பிரியங்கா

NDA ஆட்சியில் தனியார்மயமாக்கல் அதிகரித்துள்ளதாக MP பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பொதுத்துறையை, தனது நண்பர்களிடம் PM மோடி ஒப்படைத்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். நேரு, இந்திரா காந்தி ஆகியோரை விமர்சிக்கும் பாஜக தலைவர்கள், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து வாய் திறப்பதில்லை என்றும் கடுமையாக சாடியுள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் இருதரப்பும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றன.
Similar News
News November 3, 2025
இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

உலகெங்கிலும் நாம் அறியாத எத்தனையோ விசித்திரங்களும், வியப்புகளும் நிறைந்திருக்கின்றன. நிலப்பரப்பு, கலாச்சாரம், வரலாறு, சட்டங்கள் என நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் உள்ளன. அப்படி, உலகின் பல இடங்களில் காணப்படும், நாம் நம்ப முடியாத சில சுவாரஸ்ய தகவல்களை அறிய மேலே SWIPE பண்ணுங்க…
News November 3, 2025
செங்கோட்டையனை நீக்கியது வேதனை: கார்த்தி சிதம்பரம்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது வருத்தமளிப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே அதிமுக என்ற மாபெரும் கட்சி கீழ்நோக்கி செல்கிறது என்று விமர்சித்த அவர், மூத்த அரசியல் தலைவர், பல ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்தவரை நீக்கியது வேதனை அளிக்கிறது என்றார். மேலும், இது உள்கட்சி விவகாரம் என்பதால், இதற்கு மேல் பேச முடியாது எனவும் குறிப்பிட்டார்.
News November 3, 2025
புறக்கணித்த EPS, விஜய், சீமான்.. இதுதான் காரணம்

SIR-க்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் ADMK, PMK, TVK, NTK, உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காதது சோசியல் மீடியாவில் சர்ச்சையானது. ஆனால், இந்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது திமுக; அரசு கிடையாது. அதனால்தான் தனியார் ஹோட்டலில் இக்கூட்டம் நடைபெற்றது. அப்படி இருக்கையில் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் எப்படி இக்கூட்டத்தில் பங்கேற்கும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


