News November 2, 2025
கரூர்: பெட்டிக்கடையில் மது விற்ற நபர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை ஊராட்சி சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரமேஷ் (37). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் மது விற்ற ரமேஷ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மதுபாட்டிகளும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 3, 2025
கரூர் மாணவிகளுக்கு உதவிய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் பவுன்டேஷன் சார்பில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, வைதீஸ்வரி, தர்ஷினி, மணிஷா ஆகிய மூன்று மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான கல்லுாரி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக, நடிகர் ரஜினி காந்துக்கு நன்றி தெரிவித்து, மாணவியர்களின் சார்பில் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது என கரூர் மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற பொறுப்பாளர் கீதம் ரவி தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
கரூர்: வயலூரில் பெட்டிக்கடையில் மது விற்ற பெண் கைது

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு மனைவி தனம் (57). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான பெட்டி கடையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற தனம் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
News November 2, 2025
கரூர்: 25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Civil Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<


