News November 1, 2025
கடலூர்: 5 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை

கடலூர் மாவட்டம், முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அருள்மணி மனைவி ஜனனி (வயது 21). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் நேற்று இரவு முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
கடலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

கடலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News November 5, 2025
கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 9 தொகுதிகளில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று நேற்றோடு நிறைவு பெற்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து முகாம்களும் நிறைவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 5, 2025
கடலூர்: 2,313 அலுவலர்கள் நியமனம் – ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்காக திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 248, விருத்தாசலம் தொகுதிக்கு 288, நெய்வேலி 234, பண்ருட்டி 259, கடலூர் தொகுதிக்கு 227, குறிஞ்சிப்பாடி 259, புவனகிரி தொகுதிக்கு 283, சிதம்பரம் தொகுதிக்கு 260, காட்டுமன்னார்கோயில் தொகுதிக்கு 257 என மொத்தம் 2,313 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


