News April 18, 2024

நாகை: 1551 வாக்கு சாவடி மையங்கள் தயார்

image

நாகை மக்களவைத் தொகுதியில் 7,92,848 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 6 சட்டமன்ற தொகுதியிலும், மொத்தம் 1551 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், நாகை மாவட்டதில் வாக்குச்சாவடி மையங்களில் 3190 அலுவலர்கள், 59 நுண் பார்வையாளர்கள், 336 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 7500 அரசு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

Similar News

News September 26, 2025

நாகை: இதை செய்தால் கரண்ட் Bill வராது!

image

நாகை மக்களே, உங்களது வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு (Solar Panel) பொருத்துவதன் மூலம் மாதம் ரூ.2,000-3,000 வரை மின்கட்டணத்தை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<> www.pmsuryaghar.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் மாவட்டம், வீட்டு EB எண் ஆகியவற்றை பதிவிட்டால் ரூ.78,000 வரை சோலார் பேனல் அமைக்க அரசு உங்களுக்கு மானியம் வழங்கும். இதன் மூலம் எளிதாக உங்களால் பணத்தை சேமிக்க முடியும். SHARE

News September 26, 2025

நாகை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே பொதுமக்கள் இயற்கை பேரிடர் கோரிக்கை 04365-1077 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE NOW !

News September 26, 2025

நாகை: வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

image

நாகை மாவட்டம் முழுவதும் குறுவை பருவத்துக்காக 95 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், வெளி மாவட்ட நெல்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆகாஷ் எச்சரித்துள்ளார். SHARE NOW!

error: Content is protected !!