News November 1, 2025
நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்.. மழை அலர்ட்!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், நவ.6-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘மொன்தா’ புயலாக மாறி ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்த புயல் சின்னம் உருவாகியுள்ளது.
Similar News
News November 2, 2025
ஜடேஜாவை வாங்க ஆர்வம் காட்டிய RR

IPL 2026 ஏலம் நடைபெறவுள்ள நிலையில், வீரர்களை மாற்றும் பணிகளில் அணிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஜடேஜாவை வாங்க RR அணி நிர்வாகம் ஆர்வம் காட்டியுள்ளது. ஆனால், ஜடேஜாவை கொடுக்க முடியாது என CSK கறாராக சொல்லிவிட்டதாம். ’ஜட்டு பாய் CSK சொத்து’ என ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். மேலும், RR அணிக்கு ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை கொடுத்துவிட்டு, சஞ்சு சாம்சனை வாங்க DC அணி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
News November 2, 2025
இந்த தீர்ப்பு பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

‘இனிமேல் இந்த மாதிரி வாழ்க்கைல எப்பவும் நினச்சி கூட பார்க்கக்கூடாது’ என்ற எண்ணம் தான் மலேசியாவைச் சேர்ந்த 35 வயது நபருக்கு தோன்றியிருக்கும். வளர்ப்பு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, அவருக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 18 பிரம்படி தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தண்டனைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
News November 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 507 ▶குறள்: காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். ▶பொருள்: அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.


