News November 1, 2025

ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் மரணம்

image

ஈரோடு மாநகராட்சி 28 வது வார்டு கவுன்சிலராக செயல்பட்டவர் செந்தில்குமார் (50). இடையன்காட்டுவலசு பகுதியை சேர்ந்த இவருக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் 28-வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதன் வேட்பாளர் ராஜேஷ் ராஜப்பாவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

Similar News

News November 2, 2025

பகுதி நேர வேலைவாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம்

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி போன்ற உங்கள் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News November 1, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News November 1, 2025

ஈரோட்டில் இலவச லாரி ஓட்டுநர் பயிற்சி!

image

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி, சரக்கு வாகனம், ஓட்டும் பயிற்சி, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!