News November 1, 2025
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

திருப்பூர் மாவட்டத்தில் இன்று(நவ.1) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், மடத்துப்பாளையம், நம்பியாம்பாளையம், செம்பியநல்லுார், சேவூர் ரோடு, வ.உ.சி மற்றும் வீரபாண்டி துணை மின்நிலையம், ஆண்டிபாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 1, 2025
திருப்பூரில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களு கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News November 1, 2025
பல்லடம் அருகே சாலை மறியலால் பரபரப்பு

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பல்லடம் அருகே வடுகபாளையம் புதூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற கிராம சபை கூட்டத்திற்கு முறையாக பொது மக்களுக்கு அறிவிப்பு கொடுக்காமல் 100 நாட்கள் வேலையாட்களை கொண்டு கையெழுத்து பெற்று தீர்மானம் நிறைவேற்றுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்ப தெரிவித்து, அப்பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது.
News November 1, 2025
திருப்பூர்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

திருப்பூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)


