News November 1, 2025

தென்காசியில் இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தாயுமாணவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கும் மேல் உள்ள ரேஷன் கார்டுதார்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் அவர்கள் இல்லம் தேடி வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வருகிற நவ. 3, 4ம் தேதிகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பன்னுங்க.

Similar News

News November 1, 2025

தென்காசி: ரயில்வேயில் 2569 பணியிடங்கள்., உடனே APPLY

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2569 Junior Engineers, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட டிப்ளமோ, B.Sc degree முடித்தவர்கள் நவ. 30க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.

News November 1, 2025

தென்காசி: காதலுக்கு மறுப்பு., இளைஞர் தற்கொலை

image

தென்காசி பாறையடி தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (23). சவுண்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு அப்பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பெண்ணின் உறவினர்கள் நேற்று அவரிடம் தகராறில் ஈடுப்பட்டதாக கூறப்ப்டுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்காசி போலீசார் வழக்குப்பதிவு.

News November 1, 2025

தென்காசி: இளைஞர் தற்கொலை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேல அழகு நாச்சியாபுரத்தை சேர்ந்த கலகரத்தினம் மகன் கவி பிரசாத் (17) இவருக்கு கடந்த மாதங்களாக வயிற்று வலி காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் இன்று காலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் விசாரணை.

error: Content is protected !!