News November 1, 2025
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் இன்று (நவ.1) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மோன்தா புயல் காரணமாக கடந்த 28-ம் தேதி சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற உள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
சென்னையில் வீடு தேடி வரும் ரேசன் பொருள்

கூட்டுறவு சங்ககளின் கூடுதல் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற நவ 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை, சென்னையில் 15 மண்டலங்களில் வீடு வீடாக பொருள்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
News November 1, 2025
சென்னை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<
News November 1, 2025
சென்னை: பூஜை அறையில் தீ விபத்து

சென்னை பெரம்பூர் வெற்றி நகர் பகுதியில் வசிக்கும் 85 வயது வசந்தா என்ற மூதாட்டி, பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது சேலையில் தீப்பிடித்து 42% தீக்காயங்களுடன் படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து மீட்டு கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவிக நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


