News November 1, 2025
நீலகிரி: லஞ்சம் கேட்டால்.. CALL பண்ணுங்க

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் நடந்தது.எஸ்.ஐ., சக்தி முன்னிலை வகித்து பேசினார். நீலகிரி மாவட்டத்தில் லஞ்சம் பற்றிய புகார்களை நேரிலோ அல்லது டி.எஸ்.பி., 9498147234, இன்ஸ்பெக்டர் 9498124373 மற்றும் அலுவலக தொலைபேசி எண் 0423-2443962 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News November 1, 2025
ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பெரிய புல் மைதானம் என்று அழைக்கப்படும் பிரதான புல்தரை மைதானம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் பூங்காவிற்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். சீரமைத்தல் மற்றும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் நடைபெற்று வருவதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
ஊட்டி: கிராம சபையில் கலந்து கொண்ட கலெக்டர்

நீலகிரி, உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சி அலுவலக வளாகத்தில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். உடன் உதவி இயக்குநர் சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News November 1, 2025
நீலகிரி: ரயில்வேயில் 8,850 பேருக்கு வேலை! ரூ.35,000 சம்பளம்

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள 8,850 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: 12th Pass, Any Degree. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025. ஆன்லைனில் என்ற https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


