News November 1, 2025
நவம்பர் 1: வரலாற்றில் இன்று

*1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
*1956 – கேரளா, ஆந்திரா, மைசூர் (கர்நாடகா) மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
*1956 -கன்னியாகுமரி, கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மெட்ராஸ் (தமிழ்நாடு) உடன் இணைந்தது.
*1959 – தியாகராஜ பாகவதர் நினைவுநாள்.
*1973 – ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள்.
*1974 – VVS லக்ஷ்மன் பிறந்தநாள்.
Similar News
News November 2, 2025
திராணி இருந்தால் EPS-ஐ கைது செய்யுங்கள்: EX அமைச்சர்

கொடநாடு கொலையில் EPS குற்றவாளி என்றால் போலீஸ் என்ன செய்கிறது என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிதானே நடக்கிறது, EPS-ஐ ஜெயிலில் போட வேண்டியதுதானே எனவும், திராணி இருந்தால் கைது செய்து பாருங்கள் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். மேலும், EPS CM-ஆவது தெய்வத்தின் தீர்ப்பு எனவும், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே செங்கோட்டையன் CM கனவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
மீண்டும் புயல் சின்னம்.. மழை பொளந்து கட்டும்

வங்கக் கடலில் நாளை(நவ.2) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக IMD கணித்துள்ளது. இன்று நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், நாளை முதல் நவ.7-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!
News November 2, 2025
பிரபல இயக்குநரும் நடிகருமான வி.சேகர் கவலைக்கிடம்

90’s காலக்கட்டத்தில் வெளியான விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட குடும்ப படங்களை இயக்கியவர் வி.சேகர். பள்ளிக்கூடம், எங்க ராசி நல்ல ராசி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். திடீர் நெஞ்சுவலி காரணமாக வி.சேகர் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது தந்தை உயிருக்கு போராடி வருவதாகவும், அவரது உடல்நிலை சரியாக வேண்டிகொள்ளுங்கள் என்றும் மகன் கார்ல்மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.


