News November 1, 2025

குமரியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

சரலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கட்டிட ஒப்பந்தக்காரரான இவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய கங்காதரன், சுகுமாரன், மனோஜ் பிரபாகர், தேவேந்திரன் ஆகிய 4 பேரை கோட்டாறு போலீசார் கைது செய்தனர். இவர்களில் கங்காதரன், மனோஜ் பிரபாகர், சுகுமாரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி பரிந்துரைத்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார் .

Similar News

News November 1, 2025

குமரி: ரயில்வே துறையில் 2569 பணியிடங்கள்! APPLY NOW

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2569 Junior Engineers, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட டிப்ளமோ, B.Sc degree முடித்தவர்கள் நவ. 30க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.

News November 1, 2025

குமரி: மனைவியை பிரிந்த சோகத்தில் கணவர் தற்கொலை

image

சின்னணைந்தான்விளையைச்சேர்ந்த சலூன்கடை நடத்தி வரும்  ஆனந்த குமாருக்கும் (31), அவரது மனைவி அஜிதாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி சமீபத்தில் அவரை விட்டு பிரிந்து சென்றார். இதனால் வேதனையடைந்த  ஆனந்தகுமார் அக்.30 மாலை தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரையை  சாப்பிட்டு மயங்கி கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் கூறினர். சுசீந்திரம் போலீசார் விசாரணை.

News November 1, 2025

குமரியில் இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்

image

மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், மாற்றுதிறனாளிகளுக்கு  அவர்களின் வீடுகளுக்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் நவ.3,4,6 தேதிகளில் ரேஷன்கடை விற்பனையாளர்கள், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே வந்து ரேஷன் பொருட்களை வழங்குவார்கள்.

error: Content is protected !!