News November 1, 2025
இந்த ஓவியத்தின் விலை ₹120 கோடி

16-ம் நூற்றாண்டை சேர்ந்த முகலாய கால ஓவியர் பசவன் தீட்டிய ஓவியம், தற்போது ₹120 கோடிக்கு ($13.6 மில்லியன்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. மலையின் மீது மரங்களின் கீழ் சிவிங்கிப் புலிகள் குடும்பமாக ஓய்வெடுக்கும் காட்சி இதில் அற்புதமாக தீட்டப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்டி ஏல நிறுவனம் தான் இதை விற்பனை செய்துள்ளது. கலையின் மதிப்பு என்றும் குறையாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
Similar News
News November 1, 2025
நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்.. மழை அலர்ட்!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், நவ.6-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘மொன்தா’ புயலாக மாறி ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்த புயல் சின்னம் உருவாகியுள்ளது.
News November 1, 2025
பெண்களே 30 வயது ஆச்சா? இத கண்டிப்பா செய்யணும்!

வேலைக்கு செல்லும் பெண்கள், குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. அதிலும் 30 வயதுக்கு மேலே உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பது வருத்தமான உண்மை. என்ன வேலை இருந்தாலும், ஆரோக்கியம் தான் முதலில் முக்கியம். எனவே 30 வயதானால் பெண்கள் எதையெல்லாம் முக்கியமாக செய்யணும் என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க…
News November 1, 2025
BREAKING: பொங்கல் பரிசு அறிவித்தார் அமைச்சர்

தைப்பொங்கலை முன்னிட்டு, நவ.15 முதல் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். அத்துடன், இந்த முறை 15 ரக சேலைகள், 5 ரகங்களில் வேட்டிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பொங்கல் பரிசுத்தொகையாக ₹5,000 வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில், விரைவில் CM ஸ்டாலின் இதுதொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் என <<18160908>>அமைச்சர் சக்கரபாணி<<>> கூறியிருந்தார்.


