News November 1, 2025
முடிவுக்கு வந்தது ஷிவம் துபேவின் அதிர்ஷ்டம்..!

இந்திய T20 அணியின் மிகவும் ராசிக்காரராக பார்க்கப்பட்டவர் ஷிவம் துபே. அவர் அணியில் இருந்த கடந்த 37 போட்டிகளில் இந்திய அணி தோல்வியே அடைந்ததில்லை என்பதே அதற்கு காரணம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால், அவரது அதிர்ஷ்டம் இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக நெட்டிசன்கள் SM-ல் பதிவிட்டு வருகின்றனர். அடுத்த போட்டியில் இந்தியா வென்று, இந்த கணக்கை முதலில் இருந்து தொடங்குமா?
Similar News
News November 1, 2025
சற்றுமுன்: செவ்வாய்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்…

ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, பள்ளி HM-களிடம் மாணவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் செவ்வாய்கிழமை(நவ.4) கடைசி நாளாகும்.
News November 1, 2025
இந்தி, ஆங்கிலத்தை எதிர்க்கும் சித்தராமையா

இந்தியும், ஆங்கிலமும் குழந்தைகளின் திறமையை பலவீனப்படுத்துவதாக கர்நாடக CM சித்தராமையா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் குழந்தைகள் தாய்மொழியில் சிந்தித்து, செயலாற்றும் நிலையில், இந்தியாவில் அது தலைகீழாக நடப்பதாகவும், பல்வேறு வகைகளில் மத்திய அரசு இந்தியை திணிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தாய்மொழியை பயிற்று மொழியாக கொண்டு வர சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News November 1, 2025
மகளின் நினைவாக இளையராஜா புதிய அறிவிப்பு

மறைந்த தனது மகள் பவதாரிணியின் நினைவாக ‘பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா’ என்ற பெண்களுக்கான ஆர்கெஸ்ட்ராவை இளையராஜா தொடங்கியுள்ளார். இசைத்துறையில் திறமையை வளர்த்துக் கொள்ள விரும்பும் பெண்கள், இதில் பதிவு செய்யலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். முன்னதாக, 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு ஆர்கெஸ்ட்ரா தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். கேன்சர் காரணமாக பவதாரிணி கடந்தாண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


