News October 31, 2025
இது என்ன ஊரு? வினோதமா இருக்கே

போலந்து நாட்டில் உள்ள சுவோசோவா என்று ஊரில், 6 ஆயிரம் குடும்பங்கள் ஒரே தெருவில் வசிக்கின்றனர். இந்த தெரு சுமார் 9 கி.மீ தூரம் கொண்டது. ‘ஒரே தெரு’ என்ற வடிவமைப்பில் இந்த ஊர் பிரபலமாகி உள்ளது. இதன் தனித்துவமான வடிவமைப்பு, இயற்கை சூழல், விவசாயத்துடன் இணைந்த வாழ்க்கை மூலம் அழகான சிறிய ஊர் என்பதைக் காட்டுகிறது. இதன் போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
புதுவை இந்தியாவுடன் இணைந்தது எப்படி தெரியுமா?

சுதந்திரத்துக்கு பிறகும் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மன்னர்களாலும், பிரெஞ்சு, டச்சு நாட்டினராலும் ஆளப்பட்டு வந்தன. 1954-ம் ஆண்டு வரை பிரான்ஸால் நேரடியாக ஆளப்பட்டு வந்த நிலையில், இந்தியாவுடன் இணைய விரும்பி புதுவை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்துக்கு 1962, நவ 1-ம் தேதி பிரெஞ்சு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியதால், புதுச்சேரி முறைப்படி இந்தியாவுடன் இணைந்தது.
News November 1, 2025
திங்கள்கிழமை அனைத்து மாவட்டத்திற்கும் HAPPY NEWS

தமிழகம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு திங்கள்கிழமை முதல் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என TN அரசு அறிவித்துள்ளது. முக்கிய அம்சமாக, முதியோர்களின் வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 70 வயதை கடந்தவர்களுக்கு வீடு தேடி பொருள்கள் வழங்கப்பட இருந்தது. தற்போது, 65 வயது நிரம்பினாலே ரேஷன் பொருள்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
அதிமுகவில் மீண்டும் சேர்க்க முடியாது: சீனிவாசன்

மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் எனக் கூறிய ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார் என்று திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். செங்கோட்டையனுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், அதிமுகவில் ராஜாவாக இருந்தவர் டிடிவி, ஓபிஎஸ் உடன் இணைந்து கூஜாவாக மாறியுள்ளார் என சாடினார். மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.


