News October 31, 2025

கலப்பட டீ தூளை கண்டறிவது எப்படி?

image

கலப்பட டீ தூள் பயன்படுத்தினால், உடலுக்கு தீங்கு உண்டாகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், டீ குடிக்க பயன்படுத்தும் தூள் நல்லதா என தெரிந்து கொள்ளுங்கள். *தண்ணீரில் டீ தூள் போட்டு சிறிது நேரத்திற்கு அப்படியே விடுங்கள், அதன் நிறம் மாறவில்லை எனில் அது ஒரிஜினல். *வெள்ளை நிற பேப்பரில் டீ தூள் போட்டு அதில் 2 சொட்டு தண்ணீர் ஊற்றவும், பேப்பரின் நிறம் மாறினால் அது போலி டீ தூள் ஆகும்.

Similar News

News November 1, 2025

ஹாஸ்பிடலில் இருந்து ஷ்ரேயஸ் டிஸ்சார்ஜ் ஆனார்

image

சிட்னி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். சில நாள்கள் சிட்னியில் தங்கி சிகிச்சை எடுக்கவுள்ள ஷ்ரேயஸ், விரைவில் இந்தியா திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது ODI-யில் கேட்ச் பிடிக்க முயன்ற போது, அவரது மண்ணீரலில் பலத்த காயம் ஏற்பட்டு, ICU-வில் சிகிச்சை பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2025

துரோகத்திற்கு EPS-க்கு நோபல் பரிசு தரலாம்: KAS

image

துரோகம் செய்தது யார் என்பது மக்களுக்கு தெரியும். எல்லாவற்றுக்கும் வீடியோ, ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்ற நோக்கில் தேவர் ஜெயந்தியில் பங்கேற்றதற்காக கிடைத்த பரிசு தான், கட்சியில் இருந்து நீக்கம் என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும், துரோகம் செய்வதில் இபிஎஸ்-க்கு நோபல் பரிசு தரலாம் என்றும் கடுமையாக சாடினார்.

News November 1, 2025

BREAKING: கண்ணீர் விட்ட செங்கோட்டையன்

image

அதிமுகவிலிருந்து என்னை நீக்கியதால் கண்ணீர் சிந்தினேன், இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை என்று செங்கோட்டையன் வேதனையுடன் கூறியுள்ளார். MGR, ஜெயலலிதா என அனைத்து தலைவர்களிடமும் விசுவாசமாக இருந்த தன்னை நீக்கும் முன், ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக இபிஎஸ், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் தான் எனவும், அவருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

error: Content is protected !!